- போற்றி துதிப்போம் என் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசு என்னும் நாமமே – என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவை
நான் என்றும் ஏற்று மகிழ்ந்திடுவேன்
- கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவையுமே
ஈந்து தொண்டு செய்குவேன்