Puthu Vaazhvu Thandhavare | புது வாழ்வு தந்தவரே

1 minuteread

புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

  1. உம் பிள்ளைகளை மறவாமல்
    ஆண்டு முழுவதும் போஷித்தீரே
    என் குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
    மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

  1. முந்தினதை யோசிக்காமல்
    பூர்வமானதை சிந்திக்காமல்
    புதியவைகள் தோன்ற செய்தீர்
    சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

  1. கண்ணீருடன் விதைத்தெல்லாம்
    கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
    ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
    கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
    மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

Puthu Vaazhvu Thandhavare Lyrics In Tamil

0
109
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.