இராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம – நான்
நன்றி ராஜா இயேசு ராஜா – 4
- அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா - வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா - ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழி நடத்தி வந்தீரையா - துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) - கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தீரையா - உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 15 | Raja Neer Seitha Nanmaikal | இராஜா நீர் செய்த நன்மைகள் | Tamil Christian Song Lyrics