Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai | இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்

1 minuteread

Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai Lyrics in Tamil – Sis.Sarah Navaroji Christmas SongsOld Tamil Christmas Songs

இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே

உன்னதத்தில் மா மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக

1. பாவ சேற்றினிலே
பாலும் மண்ணுலகினிலே – மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
தேவன் நம்மேல் கொண்ட அன்பால்
தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்

2. சோதனைக்காரன் சாத்தான்
ஓர் சங்கரன் அவனை
அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில்
சோர்ந்திடும் மாந்தா – பொல்லா
பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா

3. இம்மை வாழ்வினிலே
இம்மானுவேல் துணையே – இன்னல்
மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில்
கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் – ஜீவா
பாதை செல்வோம் இயேசுவின் பின்னே

4. காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
காத்திருப்போம் நாம் -ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே

Lyric & Tune : Sis.Sarah Navaroji | Tamil Christmas Song Lyrics | Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai | இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Song

    0
    51
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.