Thai Madiyil Thavalukindra | தாய்மடியில் தவழுகின்ற

1 minuteread

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

  1. கவலையில்லையே கலக்கமில்லையே
    கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
    எதைக் குறித்தும் பயமில்லையே
    என் நேசர் நடத்துகிறீர்
  2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
    நன்றியோடு துதிக்கிறேன் – நான்
    கைவிடாத என் ஆயனே
    கல்வாரி நாயகனே
  3. துணையாளரே துணையாளரே
    இணையில்லா மணவாளரே – என்
    உணவாக வந்தீரையா
    உயிரோடு கலந்தீரையா – என்
  4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
    உம்தோளில் அமர்ந்துவிட்டேன் – நான்
    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
  5. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமுடன் நாடுகிறேன
    உயிர்வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்வேனையா – நான்
  6. அதிசயமே அதிசயமே
    ஆறுதல் நாயகனே – என்
    ஆலோசனைக் கர்த்தரே – என்
    அடைக்கலப் பட்டணமே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 16 | Thai Madiyil Thavalukindra | தாய்மடியில் தவழுகின்ற | Tamil Christian Song Lyrics

0
110
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.