தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்
- உறுதியற்ற உள்ளங்களே
திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
- அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய்
நடந்து செல்வார்கள் - ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் - பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 16 | Thalarnthu Pona Kaigalai Thida | தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் | Tamil Christian Song Lyrics