Thanimaiyil Ummai Aarathikindren | தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

1 minuteread

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

  1. அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
    இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
    சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
    சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே
  2. நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
    சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே
  3. நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
    உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
    உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்

Aayathamaa Vol-4 | Ravi Bharath | Thanimaiyil Ummai Aarathikindren Lyrics In Tamil

0
49
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.