தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை
- என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
- உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன் - பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகிழச் செய்தீரே - பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் - என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 21| Thanneergal Kadakkum Pothu | தண்ணீர்கள் கடக்கும் போது | Tamil Christian Song Lyrics