தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்
- அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் - பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கை வேலையில்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் - காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகு போல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன்