Varuvai Tharunamithuvae Alaikirarae | வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Varuvai Tharunamithuvae Alaikirarae | வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

  1. வாழ்நாளை எல்லாம் வீண் நாளாய்
    வருத்தத்தோடே கழிப்பது ஏன்
    வந்தவர் பாதம் சரணடைந்தால்
    வாழ்வித்து உன்னை சேர்த்துக்கொள்வார்
  2. கட்டின வீடும் நிலம் பொருளும்
    கண்டிடும் உற்றார் உறவினரும்
    கூடு விட்டு உன் ஆவி போனால்
    கூட உன்னோடு வருவதில்லை
  3. அழகும் மாயை நிலைத்திடாதே
    அதை நம்பாதே மயக்கிடுமே
    மரணம் ஓர் நாள் சந்திக்குமே
    மறவாதே உன் ஆண்டவரை
0
8
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.