- விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே – இன்று
பிரதானம்
- ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர் - நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து – சிந்திப்பீர் - ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்
Dr.N. Emil Jebasingh | Vithaippum Aruppumae Puumiyin Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics