யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
- மாமிச ஆசையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் – 2
இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே – யாருக்காய் - பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் – 2
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே – யாருக்காய் - கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் – 2
இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் – யாருக்காய் - உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் – 2
வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார் – யாருக்காய்
Dr.N. Emil Jebasingh | Yaarukkaay Vaalkiraay Nee Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics