Yaarukkaai Vaalkiraaie Nee | யாருக்காய் வாழ்கிறாய் நீ

1 minuteread

யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?

  1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
    சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
    நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் – 2
    இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே – யாருக்காய்
  2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
    மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
    மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் – 2
    ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே – யாருக்காய்
  3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
    வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
    இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே – இவர்
    நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் – 2
    இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் – யாருக்காய்
  4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
    கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
    இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
    நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் – 2
    வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார் – யாருக்காய்

Dr.N. Emil Jebasingh | Yaarukkaay Vaalkiraay Nee Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
99
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.