யாரும் காணவில்லையா?
யாரும் கேட்கவில்லையா?
எண்ண முடியா மனிதர்கள்
நித்தம் கடந்து செல்கின்றார்
எங்கே செல்கின்றார் – நீ சொல்
எங்கே செல்கின்றார்? – யாரும்
இரங்கும் ஐயா – இயேசுவே (3)
- பசியும் பட்டினியுமாய்
போர்க்க எதுவும் இன்றியே
பார்க்க யாரும் இல்லாமல்
நித்தம் கடந்து செல்கின்றார் – எங்கே - ஜெபிப்போர் மறைந்து போனாரோ?
கொடுப்போர் குறைந்து போனாரோ?
உழைப்போர் சோர்ந்து போனாரோ?
நரகலோகம் நிரம்புதே! – எங்கே - என்னைத் தந்தேன் தந்தையே
உண்மை பாரம் இல்லையே
அர்ப்பணிக்க ஆசையே
சரணம் ஐயா இயேசுவே – எங்கே
Dr.N. Emil Jebasingh | Yaarum Kaanavillaiya Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics