Yaarum Kaanavillaiya | யாரும் காணவில்லையா

1 minuteread

யாரும் காணவில்லையா?
யாரும் கேட்கவில்லையா?
எண்ண முடியா மனிதர்கள்
நித்தம் கடந்து செல்கின்றார்

எங்கே செல்கின்றார் – நீ சொல்
எங்கே செல்கின்றார்? – யாரும்
இரங்கும் ஐயா – இயேசுவே (3)

  1. பசியும் பட்டினியுமாய்
    போர்க்க எதுவும் இன்றியே
    பார்க்க யாரும் இல்லாமல்
    நித்தம் கடந்து செல்கின்றார் – எங்கே
  2. ஜெபிப்போர் மறைந்து போனாரோ?
    கொடுப்போர் குறைந்து போனாரோ?
    உழைப்போர் சோர்ந்து போனாரோ?
    நரகலோகம் நிரம்புதே! – எங்கே
  3. என்னைத் தந்தேன் தந்தையே
    உண்மை பாரம் இல்லையே
    அர்ப்பணிக்க ஆசையே
    சரணம் ஐயா இயேசுவே – எங்கே

Dr.N. Emil Jebasingh | Yaarum Kaanavillaiya Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
89
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.