இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்
உந்தன் சொல்லெல்லாம் என்றும்
உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும்
வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும்
உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும்
நீரே ஐயா நீரே ஐயா
- எகிப்திலே புது விதத்திலே
உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும்
படைகளை விலக்கி வழிவிட்டீர் - பரத்திலே நீர் அனைத்தையும்
உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும்
நீர் அடக்கி ஆள்கின்றீர் - இரக்கமும் மனதுருக்கமும்
உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும்
உம் விருப்ப குணமய்யா - மரத்திலே நீர் மரித்தது
என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன்
வார்த்தை நிறைவேற
Aayathamaa Vol-3 | Ravi Bharath | Yesaiya Um Naamam Lyrics In Tamil