யெஷுவா யெஷுவா என்ற நாமம்
உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்
முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்
அனைவரும் தொழுதிடும்
- நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழைகள் காவலனே யெஷுவா யெஷுவா
பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே - கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷுவா யெஷுவா
பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்
பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன் - ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
ஆத்துமா இரட்சகரே யெஷுவா யெஷுவா
ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே
முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே
Aayathamaa Vol-4 | Ravi Bharath | Yeshua Yeshua Endra Naamam Lyrics In Tamil