Yesuvai Pinpatrum Manitharkal Yaar | இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

1 minuteread

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்? இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

  1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
    நயமாக அழைக்கிறார் வா – நீ வா
    உலக மாமிச ஆசை
    வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
    இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன்
  2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
    எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
    பிசாசின் வலையில் சிக்கி
    பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
    இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன்
  3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
    உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
    இச்சையின் வலையில் நீ
    சிக்கி விடாதே வா வா – நீ வா
    இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன்
  4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
    உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
    இயேசுவே இறங்கிடும்
    ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
    இயேசுவைப் பின்பற்றுவேன் – எந்தன்

Dr.N. Emil Jebasingh | Yesuvai Pinpatrum Manitharkal Yaar Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
59
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.